சீர்காழியிலிருந்து வடகிழக்கில் 16 கி.மீ தூரத்திலும்,சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ தூரத்திலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்தும் சிதம்பரத்திலிருந்தும் மகேந்திரப்பள்ளி அல்லது அளக்குடி செல்லும் பஸ்சில் ஏறி ஆச்சாள்புரத்தில் இறங்க வேண்டும்.